இஸ்லாத்தின் இரண்டு பெருநாட்களான நோன்புப் பெருநாள், ஹஜ்ஜுப் பெருநாள் ஆகிய
இரு பெருநாட்களும் இரண்டு விதமான தர்மங்களை அடிப்படையாக் கொண்டவை. நோன்பு பெருநாள்
தினத்தில் சதகத்துல் பித்ர் என்னும் தர்மம் கடமையாக்கப்பட்டு இருப்பது போல், ஹஜ்ஜுப் பெருநாள்
தினத்தில் உழ்ஹியா எனும் குர்பானி கடமையாக்கப்பட்டுள்ளது. ஆடு, மாடு, ஒட்டகம் ஆகியவற்றை
இறைவனுக்காக அறுத்துப்பலியிடுவது தான் குர்பானி எனப்படுகிறது. இந்த குர்பானியின்
சட்டங்களைப் பற்றி பார்ப்போம்.
இப்ராஹீம்
நபியவர்கள் தமது மகனைப்பலியிடுவதாகக் கனவு கண்டு அதை நிறைவேற்ற முயலும்போது, இறைவன் அதைத் தடுத்து
நிறுத்தி ஓர் ஆட்டைப் பலியிடச் செய்தான். இந்த வரலாறு 37வது அத்தியாயம் 102 முதல் 108 வரையிலான வசனங்களில்
கூறப்பட்டுள்ளது. அதன் இறுதியில் 'பின்வரும் மக்களிடையே இந்த நடைமுறையை நாம் விட்டு வைத்தோம்' எனக் கூறப்படுகின்றது.
கால்நடைகளை
அவர்களுக்கு அல்லாஹ் வழங்கியதற்காக அறியப்பட்ட நாட்களிலே அல்லாஹ்வின் திருனாமத்தை
அவர்கள் துதிப்பார்கள். அதில் இருந்து நீங்களும் உண்ணுங்கள், வறிய ஏழைகளுக்கும்
வழங்குங்கள். அல்குர்ஆன் 22:28
இந்த
வசனத்தில் குர்பானிக்கான பிராணிகளைப்பற்றி அல்லாஹ் குறிப்பிடும்பொழுது அன்ஆம் என்ற
வார்த்தையைப் பயன்படுத்துகின்றான். அன்ஆம் என்றால் ஆடு, மாடு, ஒட்டகம் ஆகிய மூன்று
பிராணிகளையும் குறிக்கும். எனவே ஆடு, மாடு, ஒட்டகம் ஆகியவற்றையே குர்பானி கொடுக்க வேண்டும்.
குர்பானி கொடுக்கும் நாட்கள்
குர்பானி
கொடுக்க கடமைப்பட்வர்கள் பெருநாள் தினத்தில் பெருநாள் தொழுகை முடிந்த பிறகு தான்
கொடுக்க வேண்டும். தொழுகைக்கு முன்னால் கொடுத்தால் அது குர்பானியாக ஆகாது என்று
நபி(ஸல்) அவர்கள் கால நிர்ணயம் செய்துள்ளனர்.
நபி(ஸல்)
அவர்கள் ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தில் தொழுகைக்குப் பின் உரை நிகழ்த்தினார்கள்.
அவ்வுரையிலே யார் இத்தொழுகையை நிறைவேற்றிவிட்டு குர்பானி கொடுக்கிறாரோ அவர்தான்
அக்கடமையை நிறைவேற்றிவிட்டு குர்பானி கொடுக்கிறாரோ அவர்தான் அக்கடமையை
நிறைவேற்றியவர் ஆவார் யார் தொழுகைக்கு முன்னால் அறுக்கிறாரோ அவர் அக்கடமையை, நிறைவேற்றியவர்
ஆகமாட்டார் என்று குறிப்பிட்டார்கள். அறிவிப்பவர்: பரா(ரலி), நூல்: புகாரி.
இந்த
ஹதீஸில் இருந்து குர்பானியின் ஆரம்பநேரம் பெருநாள் தொழுகை நிறைவேற்றியதில் இருந்து
தொடங்குகிறது என்பதை அறிந்து கொள்ளலாம். ஹஜ்ஜுக் பெருநாளைத் தொடர்ந்து வரக்கூடிய 11,12,13 ஆகிய நாட்களும் குர்பானி
கொடுப்பதற்கு ஏற்ற நாட்களாகும். பெருநாள் தினத்தில் கொடுக்காதவர்கள் அதைத்
தொடர்ந்து வரும் 3 நாட்களிலும்.
இந்தக்குர்பானியைக் கொடுத்துக் கொள்ளலாம்.
அறுக்கும் முறை
குர்பானிப்
பிராணியை அறுக்கும்போது நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் பிஸ்மில்லாஹி வல்லாஹுஅக்பர்
எனக் கூறி அறுத்து இருக்கிறார்கள்.
கால்கள், வயிறு, முகம் ஆகியவை கறுப்பாக
அமைந்து உள்ள கொம்புள்ள ஓர் வாங்குமாறு நபி(ஸல்) அவர்கள் கட்டளை இட்டார்கள்.
வாங்கி வரப்பட்டவுடன், ஆயிஷhவே கத்தியை எடுத்து வா என்றார்கள். பின்னர்
அதைக் கல்லிலே தீட்டி கூர்மையாக்கு என்றார்கள். நான் அவ்வாறே செய்தேன். கத்தியை
எடுத்துக் கொண்டு ஆட்டைப் பிடித்து அதைப் படுக்கையில் கிடத்தி அறுத்தார்கள்.
அப்போது பிஸ்மில்லாஹ் என்று கூறிவிட்டு இறiவா இதை
முஹம்மதிடம் இருந்தும், முஹம்மதின் குடும்பத்தாரிடம் இருந்தும், முஹம்மதின்
சமுதாயத்தாரிடம் இருந்தும் ஏற்றுக் கொள்வாயாக என கூறினார்கள். அறிவிப்பவர்: ஆயிஷh(ரலி), நூல்: முஸ்லிம்.
முஸ்லிம்
நூலில் இடம் பெற்றுள்ள மற்றொரு அறிவிப்பில் பிஸ்மில்லாஹி வல்லாஹு அக்பர் என்று
நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே
அறுப்பவர்கள் பிஸ்மில்லாஹி வல்லாஹு அக்பர் எனக்கூறி அறுக்க வேண்டும். அறுக்கும்
போது கத்தியைக் கூர்மையாக்கிக் கொள்ள வேண்டும் என்பதையும் கவனத்தில் கொள்ள
வேண்டும்.
எத்தனை ஆடுகள்
நபி(ஸல்)
அவர்கள் கொம்புள்ள கொழுத்த இரண்டு ஆடுகளைக் குர்பானி கொடுத்திருக்கிறார்கள்.
அறிவிப்பவர்: அனஸ்(ரலி), நூல்:
புகாரி
நபி(ஸல்)
அவர்கள் இரண்டு ஆடுகள் குர்பானி கொடுத்திருப்பதால் நாமும் இரண்டு ஆடுகள் கொடுக்க
வேண்டும் என்று விளங்கிக் கொள்ளக் கூடாது. ஏனெனில் இரண்டு ஆடுகள் கொடுத்த நபி(ஸல்)
அவர்கள் ஒன்று தமக்காகவும் மற்றொன்று தமது சமுதாயத்திற்காகவும் கொடுத்தாக அவர்களே
குறிப்பிட்டதாக மற்றொரு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. சமுதாயத்திற்காக கொடுக்கின்ற
பொறுப்பு நபி(ஸல்) அவர்களைத் தவிர வேறு யாருக்கும் இல்லாததால் நாம் நமக்காகவும்
நமது குடும்பத்திற்காகவும் ஒரு ஆட்டை குர்பானி கொடுப்பது போதுமானதாகும்.
ஆபிது
பின் ஹிப்ஸ் என்ற நபித் தோழர் தமது குடும்பத்தார் அனைவரின் சார்பாகவும் ஒரே ஒரு
ஆட்டை குர்பானி கொடுத்து இருக்கிறார் என்று புகாரியில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் எத்தகைய நடைமுறை இருந்தது என்பதைப்
பின்வரும் செய்தியிலிருந்து நாம் அறிந்து கொள்ளலாம்.
நபி(ஸல்)
அவர்களின் காலத்தில் எவ்வாறு குர்பானி கொடுக்கப்பட்டுவந்தது என்று அபூ அய்யூப்
(ரலி) அவர்களிடம் நான் கேட்டேன். அதற்கவர்கள் 'ஒருவர் தமக்கும்
தமது குடும்பத்திற்கும் சேர்த்து ஒரு ஆட்டையே குர்பானி கொடுப்பார். தாமும்
சாப்பிட்டு மற்றவர்களுக்கும் சாப்பிடக் கொடுப்பார்கள். இன்று மக்கள்
பெருமையடிப்பதற்காக நீர் காணக் கூடிய நிலை ஏற்பட்டுவிட்டது' என்று விடையளித்தார்ள்.
அறிவிப்பவர்: அதா பின் யஸார், நூற்கள்: திர்மிதீ, இப்னு மாஜா
எனவே
ஒருவர் தமக்காகவும் தமது குடும்பத்திற்காகவும் சேர்த்து ஒரே ஒரு ஆட்டை குர்பானி கொடுத்தால்
அவரது கடமை நீங்கிவிடும் என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.
மாடடையோ, ஒட்டகத்தையோ குர்பானி
கொடுக்க விரும்பினால் 7 பேர் சேர்ந்து ஒரு
மாட்டையோ அல்லது ஓர் ஒட்டகத்தையோ குர்பானி கொடுக்கலாம். ஒரு மாடு, அல்லது ஓர் ஒட்டகம் 7 ஆடுகளுக்குச் சமமாக இஸ்லாத்தில் கருதப்படுகிது.
நபி(ஸல்)
அவர்கள் ஹுதைபியா உடன்படிக்கை ஏற்பட்ட ஆண்டில் 7 பேர் சார்பாக ஓர்
ஒட்டகத்தையும் 7 பேர் சார்பாக ஒரு
மாட்டையும் கர்பானி கொடுக்கச் செய்தனர். அறிவப்பவர்: ஜாபிர்(ரலி), நூல்: முஸ்லிம்.
எனவே
ஆட்டைத் தான் குர்பானி கொடுக்க வேண்டும் என்று கருதாமல், விரும்பினால் 7பேர் சேர்ந்து கூட ஒரு
மாட்டை குர்பானி கொடுக்கலாம். ஆட்டை குர்பானி கொடுத்தவர்களுக்குச் கிடைக்கும்
நன்மையில் கொஞ்சமும் இவர்களுக்கு குறையாது என்பதை இந்த ஹதீஸில் இருந்து நாம்
அறிந்துக் கொள்ளலாம்.
விநியோகம் செய்தல்
குர்பானி
கொடுக்கப்பட்ட இறைச்சியை 3 நாட்களுக்கு மேல்
சேமித்து வைக்கக்கூடாது என்று நபி(ஸல்) அவர்கள் ஆரம்பத்தில்
கட்டளையிட்டிருந்தார்கள். ஆரம்ப காலத்தில் முஸ்லிம்களிடம் நிலவிய வறுமை விலகி
செழிப்பான நிலை ஏற்பட்ட பொழுது நீங்கள் உண்ணுங்கள் வேண்டிய அளவு சேமித்து வைத்துக்
கொள்ளுங்கள் என்று நபி(ஸல்) அவர்கள் அனுமதி அளித்தார்கள். இது புகாரியில் பதிவு
செய்யப்பட்டுள்ளது.
மேலும்
மக்காவில் குர்பானி கொடுக்கப்பட்ட ஆட்டின் இறைச்சியை மதீனாவிற்கு நபி(ஸல்)
அவர்களிடம் நாங்கள் கொண்டு வருவோம் என்று ஜாபிர் (ரலி) அறிவிக்கும் ஹதீஸ்
புகாரியில் இடம் பெற்று உள்ளது.
எனவே
குர்பானி கொடுக்கப்பவர்கள் ஏழைகளுக்குக் கொடுத்துவிட்டு தேவையான அளவுக்கு சேமித்து
வைத்துக் கொள்ளலாம். புpற ஊர்களுக்கு எடுத்து சொல்லலாம் என்பதை இந்த ஹதீஸ்
இருந்து நாம் அறிந்து கொள்கிறோம்.
நபி(ஸல்)
அவர்கள் குர்பாகி கொடுத்த ஒட்டகத்தின் இறைச்சியை பங்கிட்டுக் கொடுக்கும் பொறுப்பை
என்னிடம் ஒப்படைத்தார்கள். அதனுடைய இறைச்சி, தோல் ஆகியவற்றை எல்லாம்
விநியோகிக்குமாறு உத்தரவிட்டார்கள். ஆட்டை உரித்து, பங்கிடக்கூடியவருக்குமாறு
உத்தரவிட்டார்கள். ஆட்டை உரித்து, அறுத்து, பங்கிடக்கூடியவருக்குக் கூலியாக அந்த இறைச்சியையோ, தோலையோ கொடுக்கக்கூடாது
எனவும் கட்டளை இட்டார்கள். அறிவிப்பவர்: அலீ(ரலி), நூல்: புகாரி
இந்த
ஹதீஸில் இருந்து அறுப்பவருக்கு, உரிப்பவருக்கு தனியாகத்
தான் கூலி கொடுக்க வேண்டுமே தவிர குர்பானி பிராணியின் எந்த ஒரு பகுதியையும் கூலி
என்ற அடிப்படையில் கொடுக்கக் கூடாது என்பதை அறிந்து கொள்ளலாம்.
சில
இடங்களில் குர்பானி இறைச்சியை மூன்று பங்குகளாக வைத்து ஒரு பங்கு தங்களுக்கும்
இன்னொரு பங்கு உறவினர்களுக்கும் மற்றொரு பங்கு ஏழைகளுக்கும் கொடுக்கும் வழக்கம்
இருந்து வருகிறது. இதற்கு நபிவழியில் எந்த ஆதாரமும் இல்லை.
குர்பானி பிராணிகள்
ஆடு, மாடு, ஒட்டகம் ஆகியவற்றை
குர்பானி கொடுக்க வேண்டும் என்பதை முன்னரே நாம் குறிப்பிட்டுள்ளோம்.
குர்பானி
கொடுக்கப்படும் பிராணிகள் ஏனோ தானோ என்று இருக்கக்கூடாது. மாறாக தரமுள்ளவையாக அவை
இருக்க வேண்டும்.
'நான்கு குறைகள் உள்ளவை குர்பானிக்கு ஏற்றவையல்ல. வெளிப்படையாகத் தெரியக் கூடிய
குருட்டுத் தன்மை, வெளிப்படையாகத் தெரியக்கூடிய நோய், வெளிப்படையாகத்
தெரியக்கூடிய ஊனம், கொம்பு முறிந்தது ஆகியவற்றைக் குர்பானி கொடுக்கக்கூடாது' என்று நபி(ஸல்) அவர்கள்
கூறினார்கள்.
'அல்லாஹ்வின் தூதரே! கொம்பில் ஒரு குறை, பல்லில் ஒரு குறை
இருப்பதால் அதைக் கொடுக்க நான் விரும்பவில்லை' என்று கூறினேன். அதற்கு
நபி(ஸல்) அவர்கள் 'உனக்கு எது விருப்பமில்லையோ அதை விட்டுவிடு! மற்றவருக்கு அதை ஹராமாக்கி
விடாதே' என்று
கூறினார்கள். அறிவிப்பவர்: பரா(ரலி), நூல்: நஸயீ
இந்த
ஹதீஸின் அடிப்படையில் வெளிப்படையாகத் தெரியக் கூடிய பெரிய குறைபாடுகள் இருந்தால்
தவிர்த்துக் கொள்ள வேண்டும். அற்பமான குறைகள் இருந்தால் அதையும் தவிர்க்க
விரும்வோர் தவிர்க்கலாம். கட்டாயம் தவிர்க்க வேண்டியதில்லை என்பதை அதிலிருந்து
அறிந்து கொள்ளலாம்.
நபி(ஸல்)
அவர்கள் கொம்புள்ள கொழுத்த இரண்டு ஆடுகளை க் குர்பானி கொடுத்திருக்கிறார்கள்.
அறிவிப்பவர்: அனஸ்(ரலி), நூல்:
புகாரி
நபி(ஸல்)
அவர்கள் தேர்வு செய்தது போல் நல்ல கொளுத்த ஆடு, மாடுகளை வாங்கி கொடுப்பது
சிறந்ததாகும்.
குர்பானிப் பிராணியின் வயது
குர்பானிக்காக
தேர்வு செய்யப்படும் பிராணிகள் குறிப்பிட்ட வயதை அடைந்திருக்க வேண்டும் என்று
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நிர்ணயம் செய்துள்ளார்கள். இது பற்றி நமக்குக் கடைத்துள்ள
முக்கியமான ஹதீஸ்களைப் பார்ப்போம்.
நீங்கள் 'முஸின்னத்' தவிர வேறெதனையும்
(குர்பானிக்காக) அறுக்காதீர்கள்! உங்களுக்குச் சிரமமாக இருந்தால் தவிர. அவ்வாறு
சிரமமாக இருந்தால் வெள்ளாட்டில் 'ஜத்அத்' என்பது நபிமொழி. அறிவிப்பவர்: ஜாபிர்(ரலி), நூல்: முஸ்லிம்.
நபி(ஸல்)
அவர்கள் எங்களுக்கு ஹஜ்ஜுப் பெருநாள் அன்று தொழுகைக்குப் பின் உரை
நிகழ்த்தினார்கள். அவ்வுரையில் 'யார் நமது தொழுகையைத் தொழுது விட்டுப் பலியிடுகிறாரோ அவர் தான் (குர்பானி
எனும்) கடமையை நிறைவு செய்தவராவார். யுhர் தொழுகைகiகு முன் அறுக்கிறாரோ அவர் கிரியையைச் செய்தவராக மாட்டார்' என்று குறிப்பிட்டார்கள்.
அப்போது
அபூ புர்தா (ரலி) 'அல்லாஹ்பின் தூதரே! நான் தொழுகைக்கு முன்பே அறுத்து விட்டேன். இது
உண்ணுகின்ற பருகுகின்ற நாள் என்று விளங்கிக் கொண்டேன். உனது குடும்பத்தில் நான்
அறுக்கும் ஆடே முதல் ஆடாக இருக்க வேண்டும் என்று விரும்பி தொழுகைக்கு வருவதற்கு
முன்பே அறுத்து விட்டேன்' எனக் கூறினார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள் உமது ஆடு இறைச்சிக்காக
அறுக்கப்பட்டதாகும் என்றார்கள். அல்லாஹ்வின் தூதரே! எங்களிடம் 'ஜத்அத்' பருவத்தில் ஆட்டுக்குட்டி
உள்ளது. இரண்டு ஆடுகளைவிட அது எனக்கு விருப்பமானது. ஆதை அறுத்தால் போதுமா என்று
அவர் கேட்டார். அதற்கு நபி(ஸல்) அவர்கள் போதும். ஆனால் உம்மைத் தவிர வேறு
யாருக்கும் இது போதுமாகாது என்றார்கள். அறிவிப்பவர்: பரா(ரலி), நூல்: புகாரி
நபி(ஸல்)
அவர்கள் குர்பானி ஆடுகளைப் பங்கிட்டுக் கொடுத்தனர். அதில் எனக்கு 'ஜத்வு' கிடைத்தது என்று
கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள் அதைக் குர்பானி கொடுப்பீராக என்றனர்.
அறிவிப்பவர்: உக்பா பின் ஆமிர்(ரலி), நூல்: முஸ்லிம்
எந்த
வயதுடைய பிராணியைக் குர்பானி கொடுக்கலாம் என்பதற்கு இம்மூன்று ஹதீஸ்களில் போதுமான
விளக்கம் கிடைக்கின்றது.
'முஸின்னத்' எனும் பருவம் உடையதைக் குர்பானி கொடுக்குமாறு முதல் ஹதீஸ்
கட்டளையிடுகிறது. 'முஸின்னத்' என்றால் இனவிருத்தி செய்வதற்கான பருவத்தை அடைந்தவை.
'ஜத்வு' எனும் பருவமடைவதற்கு முந்தைய நிலையில் உள்ள ஆடு. அதாவது உறுதியான பற்கள்
முளைப்பதற்காக பிறக்கும் போது இருந்த பற்கள் விழும் பருவத்தை அடைந்தவை.
இங்கே
வயதை விட பருவமடைவது தான் முக்கியமாக கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். முதல் ஹதீஸில்
பருவம் அடைந்ததை குர்பானி கொடுக்கச் சொன்ன நபி(ஸல்) அவர்கள் சிரமமாக இருந்தால்
அதற்கு அடுத்த நிலையில் உள்ளதைக் கொடுக்கலாம் எனக் கூறியுள்ளனர்.
குர்பானி கொடுப்பவர் செய்யக் கூடாதவை
ஒருவர்
குர்பானி கொடுப்பதாக முடிவு செய்துவிட்டால் அவர் துல்ஹஜ் மாதத்தின் முதல் பிறை கண்டது மதல்
குர்பானி கொடுக்கும் வரை நகம் வெட்டக்கூடாது, முடிகளை நீக்கக்கூடாது
என்று நபி(ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். அறிவிப்பவர்: உம்மு ஸலமா(ரலி), நூல்: நஸயீ
அரஃபா நோன்பு
அரஃபா
(துல்ஹஜ் பிறை 9) நாள் நோன்பைப் பற்றி
நபி(ஸல்) அவர்களிடம் வினவப்பட்டது. 'அது கடந்த வருட பாவத்தையும், அடுத்த வருட பாவத்தையும் அழித்து விடும்' என்று நபி(ஸல்) அவர்கள்
பதிலளித்தார்கள். அறிவிப்பவர்: உமர்(ரலி), நூல்: முஸ்லிம்
No comments:
Post a Comment